tag:blogger.com,1999:blog-188616492024-03-08T01:00:00.895+05:30கறுப்பு வெள்ளைகறுப்பையும் வெள்ளையையும் ஒன்றாய் ரசிக்கத் தெரிந்தவர்களுக்காகசேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comBlogger221125tag:blogger.com,1999:blog-18861649.post-52953327918210735392020-05-06T04:14:00.000+05:302020-05-06T04:14:33.416+05:30மந்திரச்சொல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அதைக்<br />
கவிதையாக்கிவிடும்<br />
மந்திரச்சொல்லுக்கான<br />
தேடலின் நொடிகளில்<br />
மரிக்கத் தொடங்குகிறது<br />
இன்னும்<br />
கவிதையாகிவிடாததொரு<br />
சொற்குவியல் </div>
சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18861649.post-61637652526613721912020-05-06T03:57:00.001+05:302020-05-06T03:57:50.844+05:30வண்ணம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மறைந்து போயிருந்தது<br />
ஒட்டுமொத்த வெள்ளை<br />
ஒற்றைக் கரும்புள்ளியில் </div>
சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18861649.post-8867076461895991682020-04-09T20:37:00.000+05:302020-04-10T11:31:08.506+05:30நாமும் நாமும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஓர் அசுவாரசியமான<br />
நீண்ட பேருந்து பயணத்தினிடையே<br />
ஒரு நொடிதான்<br />
பார்த்திருப்போம்<br />
<br />
முன் திடலில்<br />
பூக்கள் கொட்டிக்கிடந்த<br />
திண்ணை வைத்த அவ்வீட்டில்<br />
நாம் வாழ்ந்தால்<br />
நன்றாகவே இருந்திருக்கும்<br />
<br />
என்றேனும் ஒரு நாள்<br />
சந்திக்கக்கூடும்<br />
கடந்து போன<br />
நொடியிலிருந்து<br />
அங்கேயே வாழ்ந்திருக்கும்<br />
நம்மை நாம்....</div>
சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18861649.post-55661378377981289072020-03-07T19:02:00.001+05:302020-03-07T19:09:40.259+05:30கண்ணுக்கெட்டியவை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு பெரும்பயணத்தின்<br />
எச்சமாக நீண்டு கிடக்கின்றன<br />
அந்தர வெளியெங்கும்<br />
மேகங்களின் கால்தடங்கள் </div>
சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18861649.post-46673686363273570242020-03-07T18:54:00.000+05:302020-03-07T19:10:04.274+05:30முடிவுறா உரையாடல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கோடைக்காலத்தின்<br />
பிற்பகல் தனிமையில்<br />
முன்னறிவிப்பின்றி பிரவேசிக்கும்<br />
தூரத்துச் சொந்தக்காரனை<br />
வரவேற்கும் மூதாட்டியென<br />
என்னை அணைத்துக் கொள்கிறது<br />
கடல்<br />
<br />
இருவருக்கும்<br />
பொதுவான சிலரும்<br />
பொதுவான சிலதுகளும்<br />
நிறைத்திருக்கின்றன<br />
எங்கள் உரையாடல்களை<br />
<br />
எதேச்சையாக<br />
நிகழ்ந்துவிடக்கூடும்<br />
பிறிதொரு சந்திப்பிற்காகக்<br />
காத்திருக்கத் தொடங்குகிறோம்<br />
பிசுபிசுப்பான<br />
பிரிவுகளின் நிமிடங்களில்.<br />
<br />
-கடலோடு உரையாடுபவன்</div>
சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18861649.post-76915297884662473862020-02-15T06:38:00.000+05:302020-02-15T06:40:16.738+05:30சவப்பெட்டியின் வாசகன் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு<br />
சவப்பெட்டியாகத்தான்<br />
இருந்திருக்கிறது<br />
அந்த கவிதைப் புத்தகம்<br />
<br />
கிழித்த பக்கத்தில்<br />
என்ன கவிதை<br />
இருந்திருக்கக்கூடும்<br />
<br />
கவிதை வாசிக்க வந்தா<br />
நசுங்கிச் செத்துப் போனாய்<br />
நீ?<br />
<br />
உன் மரணத்தின்<br />
கடைசி நொடியில்<br />
நான் எந்தக் கவிதையின்<br />
சிலாகிப்பில் இருந்திருப்பேனோ<br />
<br />
உன் பிணத்தை<br />
மென்மையாக அப்புறப்படுத்திய நாளில்<br />
நான் கவிதையெதுவும் வாசிக்கவில்லை.</div>
சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18861649.post-78999161462179346552020-01-26T06:43:00.000+05:302020-02-24T12:48:13.330+05:30மனிதாசனம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இரண்டு கால்களில்<br />
நின்ற வண்ணம்<br />
யோகா செய்யத்<br />
தொடங்கியிருந்தது<br />
ஒரு நாய்<br />
<br />
முதலில்<br />
முன்னிரு கால்கள்<br />
பிறகு<br />
பின்னிரு கால்கள்<br />
<br />
தீவிர பயிற்சியினிடையே<br />
மனிதாசனம் என்றதற்குப்<br />
பெயர் சூட்டியது<br />
<br />
ஆண்டின் இறுதிக்குள்<br />
ஐந்து கிலோ<br />
எடை குறைப்பதெனச்<br />
சபதமேற்றிருந்தது அது<br />
<br />
<div>
<div>
உழைப்பற்ற தன் </div>
<div>
உடலின் எடை குறைக்க </div>
<div>
மாரத்தானும் </div>
<div>
மலையேற்றமும் </div>
<div>
ஜும்பா நடனமும் </div>
<div>
இத்யாதி இத்யாதிகளும் </div>
<div>
முன்பே முயன்று பார்த்திருந்ததாம் </div>
</div>
<div>
<br /></div>
<div>
<div>
குளிரூட்டப்பட்ட </div>
<div>
அறையைத் தவிர்த்து </div>
<div>
எடையை வியர்வையாகக் கரைக்கும் </div>
<div>
முனைப்பும் இருந்ததாகப் பேச்சு </div>
</div>
<div>
<br /></div>
<div>
<div>
இரவு நேரப் </div>
<div>
பெடிக்ரீயில் ஒரு பகுதி </div>
<div>
மீதம் வைப்பதாகக் </div>
<div>
கூடுதல் தகவல் </div>
</div>
<div>
<br /></div>
<div>
பின்னர்<br />
ஒரு நாளின்<br />
இருள் பிரியாத அதிகாலையில்<br />
கடற்கரையில் கைவீசி<br />
நடக்க ஆரம்பித்திருந்தது ,<br />
உறக்கம் கலையாத<br />
ஒரு மனிதனை இழுத்துக்கொண்டு </div>
</div>
சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18861649.post-79606353068063501952020-01-01T14:29:00.000+05:302020-02-15T06:39:42.758+05:30விளக்கு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பின்னிரவில் அப்பிக்கிடக்கும்<br />
மாயிருளுக்குள் புதைந்திருக்கிறது<br />
புது வருடத்தின்<br />
ஒவ்வொரு கணமும்<br />
<br />
நமக்கென நாமே<br />
செய்துகொண்ட விளக்கு<br />
இருளைத் தின்றழித்துக்<br />
கட்புலனாக்கிவிடும்<br />
நகரும் நாட்களில்<br />
<br />
நானும் நீயும்,<br />
காண்பதும் மறைவதும்,<br />
ஒன்றாகவும் வெவ்வேறாகவும்,<br />
தொடர்கிறது விளையாட்டு<br />
<br />
ஒளிவதும் தெரிவதும்<br />
ஒவ்வொரு விளக்கின்<br />
ஒளிநீளம் பொறுத்தது<br />
என்பதுதானே சூட்சுமம்<br />
<br />
சுமக்கும் கைகளே<br />
செய்வதும் ஆகையால்<br />
இன்றேனும் வாய்க்கக்கூடும்<br />
எல்லாம் காட்டும்<br />
நந்தா விளக்கு </div>
சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18861649.post-53560252367447089772013-05-17T07:26:00.000+05:302013-05-17T07:26:57.275+05:30அந்தரங்கம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: small;">இறந்தவர்கள் எழுதிவைத்த<br />நாட்குறிப்புகளைச் சேகரிக்கும்<br />வினோத பழக்கம் கொண்ட மனிதனின்<br />நாட்குறிப்பை வாசிக்கும் சந்தர்ப்பம்<br />அவன் இறந்த பிறகு கிடைத்ததெனக்கு<br /><br />தன் ஆராய்ச்சியின் பலனாக<br />மூன்று முக்கிய முடிவுகளை அறிவித்திருந்தான் அவன்<br /><br />இப்போதெல்லாம் மனிதர்கள்</span><br />
<span style="font-size: small;">அதிகமாக நாட்குறிப்பு எழுதுவதில்லை<br /><br />எழுதுபவர்களில் பெருமளவு</span><br />
<span style="font-size: small;">அதை அடுத்தவர் வாசிப்பதை மிகவும் விரும்புகிறார்கள்<br /><br />இரண்டாம் முடிவின் விளைவாகவும் <br />அவர்களின் அந்தரங்கம் புதைந்தே போகிறது<br />முன்னெப்போதைப்போலவும்</span></div>
சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18861649.post-56768385180047762862013-05-07T07:33:00.003+05:302013-05-07T07:34:53.180+05:30சிதைவுப் புள்ளி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நான்கு சாலைகள் <br />சந்திக்கும் புள்ளியில் <br />காத்திருக்கிறேன் <br /><br />ஒரு குழந்தையின் எதிர்பார்ப்புடன்<br />கிடக்கிறது மனது<br /><br />எத்திசையிலிருந்தும் வரக்கூடும் <br />என்னைச் சிதைக்கப் போகும் <br />விபத்தின் கணம்<br />காற்றைப் போல லேசாக....</div>
சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18861649.post-85468088367004727152013-02-04T00:53:00.000+05:302013-02-04T00:54:17.799+05:30தேநீர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
அறிவியல் என்கிறேன்<br />
<br />
ஆன்மீகம் என்கிறாய் <br />
<br />
நெடிய சொற்போருக்குப் பின்<br />
ஆசுவாசமாய்ச் சிறுநடைபோய்த்<br />
தேநீர் பருகிவருகிறோம்<br />
<br />
இருவரின் தேநீரும்<br />
இனிக்கவே செய்கிறது<br />
மிதமான கசப்புடன்</div>
சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-18861649.post-11260098586860709792013-01-29T03:37:00.003+05:302013-01-29T03:41:03.797+05:30அடையாளம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நான் என்பதாய் <br />
அடையாளப்படுத்துகிறது குழந்தை<br />
<br />
ஒரு நிழலை<br />
ஒரு மரத்தை<br />
ஒரு கேலிச்சித்திரத்தை<br />
ஒரு நட்சத்திரத்தை<br />
ஒரு கூண்டு மிருகத்தை<br />
ஒரு பேரலையின் மிச்சத்தை<br />
<br />
வளர்ந்தபின் அடையாளப்படுத்தும் <br />
நான்களை விடவும்<br />
உத்தமமாகவே இருந்து விடுகிறதது<br />
எப்போதும் </div>
சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-18861649.post-35395781444195182132012-11-22T04:57:00.001+05:302012-11-22T04:58:18.160+05:30அசௌகர்யம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கலையாதிருப்பதன் அழகு<br />
நித்திரை<br />
நீ<br />
<br />
கலைத்துப்பார்க்கும் நான்<br />
கொசுவை விடவும்<br />
மோசமானவன்<br />
<br />
விநோதங்களைப் பார்க்கவென்றே<br />
சபிக்கப்பட்ட இரவு<br />
சாதாரணமாய் இருப்பதன்<br />
சௌகர்யம் அறியாது<br />
<br />
<br /></div>
சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18861649.post-63009160354798534152012-10-15T10:43:00.000+05:302012-10-15T10:43:22.868+05:30<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மிக<br />நேர்த்தியாக அவிழ்க்கப்பட்டு <br />மடிப்பு கலையாதிருந்த<br />
கருஞ்சாந்து நிற அங்கி<br />
<br />தோலுடை மட்டும் தரித்துக் <br />கலைந்து கிடந்த<br />அவள்<br />
<br />ஓவியன் ஒருவனைக் <br />கண்களுக்குள் வாங்கியிருந்த<br />அவன்<br />
<br />புணர்ச்சி விகுதி <br />சிருங்கார ஓவியம்<br />ஆண்மையற்றவனின் கனவு<br />
<br />ஏதேனுமொரு தலைப்பிட்டு<br />வாசித்துக் கொள்ளுங்கள் <br />இதை</div>
சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18861649.post-34288373057497098822012-10-09T21:04:00.001+05:302012-10-10T11:18:04.428+05:30நீலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நீலத்தை ரசிக்கவெனக்<br />
கூடியிருந்தவர்கள் முன்<br />
விரிந்து கிடந்தது<br />
வானம்<br />
<br />
அவரவரும்<br />
ரசித்து நீங்கினார்கள்<br />
அவரவர் நீலத்தை<br />
<br /></div>
சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-18861649.post-2818221405788218452012-01-03T19:55:00.001+05:302012-01-03T20:00:24.631+05:30எழு(த்)து<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எழுதாமல் இருப்பதைப் பற்றிய குற்ற உணர்வு சமீப காலமாகவே என்னை அதிகமாக ஆட்கொண்டிருக்கிறது. நான் எழுதுவதனால் என்ன ஆகிவிடப் போகிறது? எழுதாமல் இருப்பதனால்தான் என்ன ஆகி விடப் போகிறது? ஒன்றும் புரியவில்லை. எழுத வேண்டுமென்கிற ஆசை மட்டும் விட மாட்டேனென்கிறது.<br />
<br />
எழுதுவதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும் என்கிறார் ஓர் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். ஒரு வருடத்துக்குப் பெரிய பட்டியல் போட்டுக் கொண்டு படிக்கவும் எழுதவும் செய்கிறவர் அவர். அலுவலக வேலை போல இப்படிச் செய்ய என்னால் இயலவில்லை. தினமும் நேரம் ஒதுக்கிக்கொண்டு எதையாவது எழுது என்கிறார். அன்றாட செலவுக்கணக்குகளைத் தாண்டி என்னால் எதையும் தினமும் எழுத முடிவதில்லை; அதிலும் ஒன்றிரண்டு விட்டுப் போகிறது. <br />
<br />
எழுதும் பழக்கத்தை ஊக்கப் படுத்துவதற்காக ஒரு வலைத்தளம் உண்டென்றும், நண்பர்களுடன் இணைந்து கொண்டு போட்டி போட்டு எழுத வேண்டும் என்றும் சொன்னான் நண்பனொருவன். ஒரு நாளுக்குள் 750 வார்த்தைகள் <a href="http://www.750words.com/" target="_blank">(www.750words.com)</a> எழுத வேண்டுமாம். தெரிந்த வார்த்தைகளை எல்லாம் ஒரு முறை எழுதி வைத்தாலும் இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு தலையைச் சொறிய வேண்டியது தான் போலிருக்கிறது. <br />
<br />
பேச்சைக் குறைத்தால் ஒருவேளை நிறைய எழுதலாமோ என்கிற அசட்டுத் தனமான முயற்சியும் மனைவியின் சந்தேகப் பார்வையால் தோல்வியுற்றது. குடும்பஸ்தனாக, அதிலும் தகப்பனாக எழுத நேரம் கிடைப்பதே அரிதாகி விட்டதாகக் காரணம் சொல்லிக் கொள்ள முடிந்தாலும், எழுதும் நேரத்தில் தூளியில் அழும் மகளைத் தூங்கச்செய்ய இடைவேளை தேடிக் கொண்டாலும் எழுத மீதமிருக்கிறது இன்னும் நிறைய.<br />
<br />
இப்படி எதையாவது எழுதுவதற்கு உருப்படியாக எதையாவது எழுதிவிடலாம் தானே!</div>சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-18861649.post-18390623938805651742012-01-02T21:50:00.003+05:302012-01-02T21:51:46.613+05:30உலகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சாளரத்தின் வெளியில்<br />
நிறையும் என்னுலகில்<br />
பச்சை போர்த்திய வேம்பு மட்டும்<br />
<br />
செவ்வகச் சட்டங்களுக்குள் புதையும்<br />
ஓவிய மரத்தின் கால்கள்<br />
எங்கு பாவியிருக்குமோ!<br />
<br />
வானத்தை விடவும் பெரிதாகச்<br />
சிறகு விரித்தாடுகிறது வேம்பு<br />
கூடவே எங்கேனும் ஆடக்கூடும்<br />
அதனோடு அதன் நிழலும்<br />
<br />
காற்றுக்கு அசைந்தும்<br />
பறவைக்கு வளைந்தும்<br />
வெயிலுக்குத் தளர்ந்தும்<br />
மழைக்கு நெகிழ்ந்தும் கொடுக்கும்<br />
வேம்பின் உலகில் இருக்கலாம்<br />
இன்னும் எதேதேனும்<br />
<br />
என்னுலகில் வேம்பு மட்டுமென்பதில்<br />
ஒன்றும் வெட்கமில்லை<br />
<br />
அவரவர் உலகம்<br />
அவரவர்க்கு.</div>சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-18861649.post-16874188031605192962011-12-25T11:42:00.003+05:302012-01-02T23:03:50.450+05:30ஒரு சலூன் கடையும், சில உதிரி முடிகளும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சவரக்கத்தி<br />
கழுத்தில் அழுந்தும்போது<br />
புலனாகின்றன<br />
வாழ்வின் மீதான பிடிப்பும்<br />
சக மனிதனின் மீதான நம்பிக்கையும்<br />
----------------------------- <br />
அழகான பெண்களும்<br />
அவ்வப்போது வருகிறார்கள்<br />
ஆடைகளை அவிழ்த்துவிட்டு<br />
சுவரோடு ஒட்டிக்கொள்கிறார்கள்<br />
----------------------------<br />
அந்த மூன்றெழுத்து நாயகியின்<br />
அந்தரங்கக் காதலன் பற்றிய<br />
இரண்டாவது குறிப்பில்<br />
இருக்கும்போதுதான்<br />
காலியாக வேண்டுமா<br />
சவர நாற்காலி?<br />
----------------------------<br />
வேறுமாதிரி இருந்தார்கள்<br />
முடிதிருத்தியபின்<br />
நேருக்குநேர் பதித்திருந்த<br />
கண்ணாடிகளின் <br />
உள்ளே உள்ளே <br />
அமர்ந்திருந்த <br />
'நான்'கள்<br />
---------------------------<br />
எப்போதுமே சாதாரணமாக<br />
வந்து விழுகிறது கேள்வியொன்று<br />
மீடியமா? ஷார்ட்டா? <br />
முடிந்த பின் எதுவாகவுமில்லாமல் <br />
என் விருப்பம் போலுமில்லாமல் <br />
அமைகிறது ஏதோ ஒன்றாக<br />
----------------------------<br />
அந்தப் பாடலின் காட்சி<br />
எனக்கு மிகப்பிடிக்கும்<br />
இன்று தான் கவனித்தேன்<br />
அதன் பாடல் வரிகளை<br />
----------------------------<br />
கண்கள் மூடி<br />
ராட்டினமாடிப்<br />
பின் மெல்லக் கலைகிறது<br />
குட்டித் தியானம்</div>சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-18861649.post-81654538981868748112011-11-02T19:55:00.002+05:302011-11-02T20:05:21.622+05:30இடப்பெயர்ச்சிஇறந்து கொண்டிருக்கிறவனின் <br />கைகளை<br />அழுந்தப் பற்றிக்கொள்கிறேன்<br />கைகளினூடே <br />ஈருடல்களில்<br />பாய்ந்து கலக்கின்றன<br />உயிர்மையும், மரணமும்சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-18861649.post-32773816770696760922011-11-02T19:47:00.000+05:302011-11-02T20:05:21.623+05:30பாத்திரம்எவ்வளவு எடுத்தாலும் குறையாத<br />அட்சயப் பாத்திரத்துடன்<br />வந்து சேர்ந்தாள் மணிமேகலை<br /><br />பிழையில்லை<br /><br />எவ்வளவு இட்டாலும் நிறையாத<br />பாத்திரங்கள் நிறையவே இருக்கின்றன<br />எம்மிடம்சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18861649.post-86248225863379324192011-09-08T19:11:00.001+05:302011-09-08T19:31:20.546+05:30காலம் தள்ளும்அடைந்து கிடக்கும்<br />ஒளியறு வீட்டில்<br />காலம் அளந்து<br />காலம் தள்ளும்<br />யாருங்காணாத கடிகாரம்<br /><br />ஓடிக்களைத்து<br />மூச்சடங்கி<br />ஆவியொடுங்கும்<br />ஒருநாள்<br /><br />விரல்கள் பிரித்து, தள்ளி,<br />விரைந்தோடும் காலம்<br />இன்னும் இன்னும்சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-18861649.post-32577203928665894762011-07-28T22:25:00.001+05:302011-07-28T22:40:52.678+05:30கவிமூலம்நினைவடுக்குகளிலிருந்து <br />காணாமல் போனதொரு கவிதை<br /><br />எதனிடமிருந்தோ<br />திருடியதுதான் <br /><br />அரைத்தூக்கத்தில் வாசித்த<br />இன்னொருவனின் கவிதை, <br />மெல்ல மெல்லத் திறக்கும் <br />கதவின் பேரிரைச்சல் , <br />குருட்டுப் பாடகனின் <br />முதல் நிமிட அபஸ்வரம், <br />விபத்தில் நசுங்கியவனின் <br />கடைசி இழுப்பு<br /><br />ஏதோ ஒன்றுதான் <br />மூலமாய் இருந்தது <br /><br />மீண்டும் கிடைக்கக்கூடும் அதே கவிதை! <br /><br />வாசிக்காமலா இருக்கப் போகிறேன் <br />இன்னொருவனின் கவிதையை? <br />திறக்காமலா இருக்கப்போகிறது <br />இன்னொரு கதவு?<br />பாடாமலா இருக்கப் போகிறான் <br />இன்னொரு குருட்டுப்பாடகன்?<br />நசுங்காமலா இருக்கப்போகிறான்<br />இன்னொரு விபத்தில் <br />இன்னுமொருவன்?சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-18861649.post-13966024015181581722011-06-27T20:54:00.001+05:302011-06-27T21:06:41.584+05:30காலையாரும் உறங்கக்கூடும்<br />யாரும் விழித்திருக்கக் கூடும்<br />நான் நடந்து போகிறேன்<br /><br />ஒரு வழிப்பாதையை<br />இருவழியாக்கிக் கடந்து போகும்<br />மாநகரப் பேருந்தை<br />முட்டுக் கொடுத்துத் தூக்கி<br />யுடைந்த காலுடன் விழுகிறது<br />சாலை நாய்<br /><br />பதைத்துப் போய்க்<br />கூர்ந்து பார்த்து<br />நின்று நகர்கிறது<br />என்னைப் போல்<br />காலை வெயிலும்சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-18861649.post-74087359929818314352011-05-31T12:26:00.002+05:302011-05-31T15:02:53.988+05:30கன்னல் தமிழ்இருத்தலின் இன்னொரு பரிமாணத்துக்கு வாழ்க்கை நகர்த்தியிருக்கிறது. இதுவரை இல்லாத மகிழ்ச்சியையும் கூடவே பயத்தையும் உணர முடிகிறது தந்தையாய் இருத்தலில். ஒரு மாதமாகிவிட்டிருக்கிறது. மெல்ல மெல்ல இந்த உலகத்துடன் பழகத் தொடங்கியிருக்கிற ஒரு புது உயிருடன் நானும் பழகத் தொடங்கியிருக்கிறேன். உருவங்கள் கூட புலப்படாத கண்களுக்கு அப்பா பாரு அப்பா பாரு என்று என்னை அறிமுகப் படுத்தி வைக்கிறார் மனைவி. யாருக்கும் புரியாத சத்தமும், அமைதியும், தூக்கமும், சிரிப்பும், அழுகையுமாக வாழ்கிறாள் எங்கள் பிஞ்சு தேவதை.<br /><br />எஸ்ராவின் 'இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன' சிறுகதையில் ஒருவன், தான் அப்பா ஆனதும், கண்ணில் படும் ஆண்களை இரண்டே வகையில் பிரித்துவிடும் சிந்தனையிலிருப்பான். அப்பா ஆனவர்கள், அப்பா ஆகப்போகிறவர்கள். அவன் பார்வையே அப்பாக்களின் உலகத்தைச் சார்ந்ததாக மாறிவிடும். நானும் அது போலான சிந்தனையில் சில பொழுதுகளில் வாழ்கிறேன். இந்த அனுபவமும் சுகமாகவே இருக்கிறது. இன்னும் பல அனுபவங்களைத் தரக் காத்திருக்கும் வாழ்க்கையின் மீதான நம்பிக்கை நீள்கிறது.<br /><br />இப்போது பெயரற்ற தேவதைக்கு பெயரும் வைத்தாயிற்று. ஆணுக்கொன்று, பெண்ணுக்கொன்றாக முன்பே பெயர் தெரிவு செய்து வைத்திருந்தோம். இடையில் நியூமராலஜி, நேமாலஜி என்று ஏதேதோ லஜிகள், ராசி எழுத்து போன்ற தடைகளை மீறி விரும்பிய பெயரையே சூட்டியதும் பெரிய சாதனையாகப்படுகிறது. <br /><br />அர்த்தம் புரியாத பிற மொழிப் பெயர்களை நாகரிகமாக வைத்துப் பெருமைப்படும் மக்கள், நாங்கள் சூட்டியிருக்கும் தமிழ்ப்பெயர் வாயில் நுழையவில்லை என வருத்தப்படுகிறார்கள். எனக்குப் பெயர் சூட்டிய என் அப்பாவின் நிலைமை இப்போது புரிகிறது. எழுத்தாளர் பாமரன் ஒரு முறை 'அண்ணா சாலையில் நின்று சுரேஷ் என்று சத்தமிட்டால் தொண்ணூறாயிரம் சுரேஷ்கள் திரும்பிப் பார்ப்பார்கள்' என்று சொன்னார். அதுவும் ஒருவகையில் உண்மைதான். தமிழில் பெயர் வைப்பது என்பது மட்டுமல்லாமல், அதிகம் அறியப்படாத பெயராகவும் இருக்க வேண்டும் என்று கருதினோம். 'கன்னல் தமிழ்' அப்படித்தான் இருக்குமென நம்புகிறோம்.சேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-18861649.post-11323686454876987582011-05-18T11:03:00.000+05:302011-05-18T11:06:39.374+05:30இழவு வீடுரசம்போன<br />பழைய நிலைக்கண்ணாடியின்<br />தெளிவற்ற பிம்பமெனச்<br />சமைந்திருக்கிறது<br />இழவு வீடு<br /><br />அதிக துக்கத்திலோ<br />சிரித்துவிடக் கூடுமெனும் பயத்திலோ<br />பாதிமுகம் புதைத்திருக்கும்<br />சிலரின் கண்கள் வெறித்திருக்கின்றன<br />ஈக்கள் ஆடும் கண்ணாமூச்சியை<br /><br />திரும்புவதற்குள்<br />அழுதுவிடவேண்டுமென<br />அதிகப் பிரயத்தனப்படும்<br />யாரேனுமொருவனிருக்கிறான்<br />இந்த வீட்டிலும்<br /><br />வெய்யில் தின்றது போக<br />மீதப் பிற்பகலை<br />வாய் பிளந்து<br />தின்று தீர்க்கிறார்கள் சிலர்<br /><br />மவுத் ஆர்கன்<br />வாசிக்கத் தொடங்குகிறான்<br />அழுது முடித்திருந்த ஒரு சிறுவன்<br />புன்னகைத்தபடி<br /><br />சாவுடன் சேராததொரு இசை<br />சாவை நசித்தபடி<br />உற்சாகமாக நிறைக்கிறது<br />காற்றின் அடுக்குகளைசேரலாதன் பாலசுப்பிரமணியன்http://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com2