Tuesday, April 14, 2009

அழகெனப்படுவது

வேண்டாம்,
அசிங்கமென
எறியப்பட்ட
பஞ்சடைந்த
ரோஸ் நிற தேவதை பொம்மை
புழுதியில் அழுந்தி,
அழுக்காகி,
பின்
இரயில் நிலையத்தில்
இராப்பொழுதில்
தூங்கும் சிறுவனின்
மார்போடுறங்கி
அழகாகியிருந்தது

15 comments:

  1. //இரயில் நிலையத்தில்
    இராப்பொழுதில்
    தூங்கும் சிறுவனின்
    மார்போடுறங்கி
    அழகாகியிருந்தது //

    அழகாக சொல்லியிருக்கீங்க
    நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. அருமையான கவிதை சேரல். வாழ்த்துகள்

    ReplyDelete
  3. @ஆ.முத்துராமலிங்கம், @பிரேம்குமார்
    வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. சேரலாதன்,
    உன்னுடைய படைப்புக்களை படிக்க பெருமையாக உள்ளது.
    தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. @Dharini

    நன்றி தோழி!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  6. அருமை நண்பரே

    ReplyDelete
  7. அருமையான கவிதை !!

    ReplyDelete
  8. @திகழ்மிளிர், @பரத்
    வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  9. ஓ!இப்படியும் மெல்லிய கவிதை சொல்ல முடியுமோ?

    (நான் உரைநடை நடை நடைக்காரனுங்க அதனாலதான்:))

    ReplyDelete
  10. @ராஜ நடராஜன்,

    நன்றி நண்பரே!
    உரைநடை இலக்கியம் அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கைவந்து விடுவதும் இல்லை. உங்கள் வலைப்பக்கம் பார்த்தேன். உங்களுக்கு நன்றாகவே கைவருவதாகத் தோன்றுகிறது. வாழ்த்துகள்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  11. இதுவும் அழகாக இருக்கிறது.

    ReplyDelete
  12. கடைசி வரியில் கவிதையும் மிக மிக ஆழகாகிறது. அருமை.

    அனுஜன்யா

    ReplyDelete
  13. நன்றி அனுஜன்யா!

    @ஜ்யோவ்ராம் சுந்தர்
    நன்றி நண்பரே!

    'பஞ்சடைந்த' என்பது பொம்மையை முதல் நிலைப் பொருளாகக் கொண்டால் சரியே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete