Sunday, April 26, 2009

தலைமுறை

ஊருக்கெல்லாம்
குளம் வெட்டி
நீர்க்கொடை
செய்து வைத்த
பெரியசாமி அண்ணாச்சியின்
பேரன்
சொல்கிறான்

'ஸ்...... அப்பா!
இந்த
பெப்ஸி
குடிச்சாத்தான்
தாகமே அடங்குது!'

9 comments:

  1. இது தலைமுறை இடைவெளியா? வெட்டி பந்தாவா??

    பெப்ஸி குடிச்சா தாகம் அடங்குமா????

    ReplyDelete
  2. //வெட்டி பந்தாவா??//
    பிரேம் நச்! உண்மை வெட்டி பந்தாதான் இப்ப விஜை கூட டிவியில பண்றார!!!

    //பெப்ஸி குடிச்சா தாகம் அடங்குமா????/

    அடங்காது அது மன 'பிராந்தி'

    சேரல் சார் அத ஏக்கமா சொல்றாங்க.

    ReplyDelete
  3. ihtula enna santegam intha thalaimurai pantha than

    ReplyDelete
  4. என்ன பண்றது சேரல், இப்படி இருக்கு ம்,,,,

    கவிதை அருமை

    ReplyDelete
  5. @பிரேம்குமார்
    முத்து ராமலிங்கம் சார் சொல்வது போல இது மனப்பிராந்தியாக இருக்கலாம். காண்கின்ற அனுபவம் அவ்வளவே. எந்தவிதமான போதனையோ கற்பிதமோ இல்லை. நீங்கள் சொல்வது போல வெட்டி பந்தாவாக இருக்க வாய்ப்பு அதிகம்.

    @ஆ.முத்துராமலிங்கம்
    நன்றி நண்பரே! இது இந்தத் தலைமுறை பார்த்து வரும் ஏக்கம் தான்.

    @gayathri
    நன்றி தோழி!
    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

    @yathra
    நன்றி நண்பரே!
    இப்படியும் இருக்கிறது

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  6. இது முரணைச் சொல்லும் ஒரு ஸ்டேட்மெண்டாக நின்றுவிடுகிறது. கவிதையாக மாறவில்லை.

    ReplyDelete
  7. @ஜ்யோவ்ராம் சுந்தர்

    இருக்கலாம். தோன்றியதை எழுதினேன். உணர்வுகள் கடத்தப்படும் ஊடகமாக எழுத்தைப் பார்க்கிறேன் நான். அழகியல் கொஞ்சம் குறையலாம். ஆனால் ஆத்மா இருக்கிறது.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  8. உட்கருத்து அருமை.

    நம் தண்ணீரை அவன் நமக்கே காசுக்கு விற்கும்பொழுது வேறு எதைபற்றி பேசி என்ன

    ReplyDelete
  9. உண்மைதான் இலக்குவண். அதையும் வாங்கிக் குடிக்கிறோமே, நம்மை என்ன சொல்ல?

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete