Wednesday, May 27, 2009

துணி

கருப்பு
சிவப்பு
வெள்ளை
நீலம்
மஞ்சள்
பச்சை
என்று
வண்ணங்கள் கலந்தடித்துப்
பளபளக்கின்றன
கொடிகள்

என் வீட்டுக் கொடியில்
காய்கிறது
தாத்தாவின்
கிழிந்த கோவணம்

8 comments:

  1. தாத்தாவுக்காக கவிதை எழுதனும்னு
    தோணின உங்களுக்கு
    புது கோவணம் வாங்கி கொடுக்கணும்னு
    தோணிருக்கும்னு நினைக்குறேன்

    பதில் புண்படுத்தவில்லைனு நம்புறேன்

    ReplyDelete
  2. அருமை வரிகள்

    எதார்த்தத்தை

    எதார்த்தமாக சொல்கின்றன‌

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்கு சேரல்.

    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  4. ஒரு பாதிப்பை ஏற்படுத்துது சேரல் இந்தக் கவிதை, நல்ல கவிதை நண்பா

    ReplyDelete
  5. @Abbasin Kirukkalkal
    கொடி கிழித்தாவது கோவணம் செய்து தருவேன். அது நிச்சயம்! புண்படுத்த ஏதும் இல்லை நண்பரே!

    @நட்புடன் ஜமால்
    நன்றி நண்பரே!

    நன்றி முத்துவேல்!

    நன்றி பிரவின்ஸ்கா!

    நன்றி யாத்ரா!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  6. //

    வண்ணங்கள் கலந்தடித்துப்
    பளபளக்கின்றன
    கொடிகள்

    என் வீட்டுக் கொடியில்
    காய்கிறது
    தாத்தாவின்
    கிழிந்த கோவணம்

    //

    என்று மட்டும் வாசித்துக் கொண்டால் எனக்கும் பிடித்துப் போகிறது

    ReplyDelete
  7. மிக எளிமையா இருந்தாலும் நல்லா இருக்குங்க சேரல்!

    ReplyDelete