Wednesday, June 10, 2009

முதல் பயணம்

கைகளை இருபுறம் விரித்துப்
பறவையென்றாகிறாள்

இரு புறமும் பின்னோடி மறையும்
காட்சிகள்
அவள் விளையாட்டுலகின்
பிம்பங்களாகின்றன

கலைந்து பறக்கும்
கேசத்தின் இழைகளை
ஒரு தேவதையின் விரல்கள் கொண்டு
ஒதுக்கி விடுகிறாள்

இரவை ஆக்கிரமித்திருக்கும்
ஒளி விளக்குகள்
அவள் பிடிக்கத்துடிக்கும்
நட்சத்திரங்களாகின்றன

கூடும் வேகம்
அவள் கீச்சுக்குரலுக்கு
ஒத்த சுதியில் இசைக்கிறது

பயணம் முடிந்தும்
பயணித்துக் கொண்டே இருக்கிறாள்
பார்த்து வந்த பாதைகளில்

இனி அவள் வாழ்க்கையில்
வரப்போகும் ஒவ்வொருவரிடமும்
சொல்ல ஒரு கதை இருக்கும்
அவளிடம்

முதல்முதலா
எங்கப்பா கூட பைக்ல
போகும்போது......

14 comments:

  1. சேரல்,
    மிகவும் அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  2. பிரம்மாதமான கவிதை இது ... மிகவும் ரசித்தேன் ... this is highly aesthetic ... I just love it ...

    ReplyDelete
  3. அருமை சேரல்

    ReplyDelete
  4. read and rode your lines!!

    ReplyDelete
  5. //கலைந்து பறக்கும்
    கேசத்தின் இழைகளை
    ஒரு தேவதையின் விரல்கள் கொண்டு
    ஒதுக்கி விடுகிறாள் //

    அருமை .

    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  6. வெகு அழகான கவிதை சேரல்.
    அருமை

    ReplyDelete
  7. அனுபவிச்சு ரசிச்சி ருசிச்சி எழுதியிருக்கீங்க. நல்லா வந்திருக்கு.

    ReplyDelete
  8. அகநாழிகை
    Nundhaa
    gowripriya
    kartin
    பிரவின்ஸ்கா
    தமிழ்ப்பறவை
    ஆ.முத்துராமலிங்கம்
    yathra
    ச.முத்துவேல்

    மிக்க நன்றி நண்பர்களே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  9. தலைப்பு எடுக்குறதுல உங்கள மிஞ்ச ஆள் இல்ல மச்சோ!
    நல்லாருக்கு

    ReplyDelete
  10. //கலைந்து பறக்கும்
    கேசத்தின் இழைகளை
    ஒரு தேவதையின் விரல்கள் கொண்டு
    ஒதுக்கி விடுகிறாள்
    //

    மிகவும் ரசித்தேன்

    ReplyDelete
  11. நன்றி மயாதி!

    நன்றி பிரேம்!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  12. அட்டகாசம். Fantastic. வேறு என்ன சொல்ல!

    அனுஜன்யா

    ReplyDelete