Wednesday, July 01, 2009

ஈரம் சேர்ந்தது

தனக்கென்று எதையும்
வைத்துக் கொள்வதில்லை கடல்

நிர்வாணியாகவே அலைகிறது
ஒரு திகம்பரனைப் போல

என்றாலும்
பிரித்துணர முடியாத ஈரம்
அதன் வெளியெங்கும்
பிசுபிசுக்கிறது

- கடலோடு அழுபவன்

6 comments:

  1. கவிதையெங்கும் ஈரமாய் விரவியிருக்கும் சோகம் ...நல்லா இருக்கு....

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது தோழரே....

    ReplyDelete
  3. நல்லா இருக்கு.

    அனுஜன்யா

    ReplyDelete