Tuesday, July 14, 2009

சிரிப்பும் சேர்ந்தது

விழுந்து புரண்டு சிரிக்கிறது

கடைவாயில் நுரைபொங்க
எச்சில் ஒழுக
ஒரு குழந்தையென நகைக்கிறது

தூந்திர நிமிஷங்களை
மறந்துவிட்டு
உருகியுருகிச் சிரித்தோடுகிறது

பேரிரைச்சலோடு எழுவதும்
பெருமைகள் அற்று விழுவதும்
இயல்பே எனச்சொல்லி
பெருங்கூச்சலிடுகிறது கடல்

-கடலோடு சிரிப்பவன்

19 comments:

  1. தலைப்பு வேறு இருந்து இருந்தால் இன்னும் இரசித்து இருக்கலாம.

    [[பேரிரைச்சலோடு எழுவதும்
    பெருமைகள் அற்று விழுவதும்
    இயல்பே எனச்சொல்லி
    பெருங்கூச்சலிடுகிறது கடல்]]

    மிக அருமை.

    ReplyDelete
  2. //கடைவாயில் நுரைபொங்க
    எச்சில் ஒழுக
    ஒரு குழந்தையென நகைக்கிறது //

    கவிதை நல்லாருக்கு.

    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  3. சேரல்,
    கவிதை நன்றாக இருக்கிறது.

    ‘தூந்திர‘ என்ற வார்த்தையின் பொருள் என்ன..

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  4. நன்றி ஜமால்

    நன்றி பிரவின்ஸ்கா

    நன்றி அகநாழிகை
    தூந்திரம் எனும் சொல், துருவப்பகுதிகளைக் குறிக்கும்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  5. அழகு....
    நான் கேட்க நினைத்ததை வாசு சார் கேட்டு தெளிவடைய வைத்து விட்டார்...

    ReplyDelete
  6. ரொம்ப அழகா எழுதுறீங்க சேரல். வாழ்த்துக்கள். :)
    --வித்யா

    ReplyDelete
  7. நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. beautiful one!

    i'll go with jamal.. a title without revealin 'sea' would hv bn gud either!!

    ReplyDelete
  9. ஜமால் மற்றும் கார்த்தி,

    உங்கள் கருத்து மிகச்சரி. ஏற்றுக்கொள்கிறேன். தலைப்பை மாற்றிவிடுகிறேன். நன்றி!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  10. கடல் காட்சி நன்றாக இருக்கிறது சேரல்

    ReplyDelete
  11. சொல்ல நினைத்தது, கேட்க நினைத்தது எல்லாம் எனக்கு முன்னமேயே முடித்துவிட்டார்கள்.மீண்டும்..
    நல்லாருக்கு.

    ReplyDelete
  12. நல்லா இருக்கு சேரல்.

    ReplyDelete
  13. நன்றி தமிழ்ப்பறவை

    நன்றி Vidhoosh

    நன்றி மதன்

    நன்றி Nundhaa

    நன்றி முத்துவேல்

    நன்றி யாத்ரா

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  14. நல்லாயிருக்கு சேரல்

    ReplyDelete
  15. //கடைவாயில் நுரைபொங்க
    எச்சில் ஒழுக
    ஒரு குழந்தையென நகைக்கிறது //

    மிக அருமையான உருவகம் !

    ReplyDelete
  16. நன்றி மண்குதிரை

    நன்றி நளன்,
    தொடர்ந்து வாருங்கள்

    நன்றி கோகுல்

    நன்றி கதிரவன்,
    தொடர்ந்து வாருங்கள்

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  17. //கடைவாயில் நுரைபொங்க
    எச்சில் ஒழுக
    ஒரு குழந்தையென நகைக்கிறது//
     
    அழகா சொன்னீங்க சேரல்.

    ReplyDelete