Wednesday, July 01, 2009

மறந்த கதைகள்

எனக்குப் பிடித்த
ஒளிரும் கண்கள் கொண்ட
மீன் பற்றிய
கதையொன்று
மறந்து போனதைச்
சொன்னேன் நண்பனிடம்

தன்னிடமும்
அதே போல்
மீன் பற்றிய
மறந்த கதை
உண்டென்றான்

இரண்டு கதைகளும்
ஒன்றே என்று
காரணமின்றி
நம்பத்தொடங்கினோம்
இருவரும்

10 comments:

  1. சேரல்,
    கவிதை நன்றாக இருக்கிறது.
    வரிகளை அமைப்பதில் மாற்றம் செய்திருந்தால் இன்னமும் நன்றாக வந்திருக்கும்.

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  2. //இரண்டு கதைகளும்
    ஒன்றே என்று
    காரணமின்றி
    நம்பத்தொடங்கினோம்
    இருவரும்//

    நன்றாக இருக்கிறது தோழரே...

    ReplyDelete
  3. நன்று
    கடைசி வரி முத்தாய்ப்பு..!

    ReplyDelete
  4. நல்லருக்கு சேரல்.

    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  5. hmmm ... நல்லாயிருக்கே கதை ... :)

    ReplyDelete
  6. நல்லா இருக்கு சேரல்.

    அனுஜன்யா

    ReplyDelete
  7. சேரல்,
    கவிதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  8. ரொம்ப நல்லா இருக்கு சேரல் கவிதை :)

    ReplyDelete