Thursday, August 13, 2009

சுயம்

யாரும் பார்க்காத பொழுதொன்றில்
எல்லோரும் பார்க்க
பருத்த உடல் தூக்கி
ஓட்டமும் நடையுமாய்க்
கீழே குனிந்தபடி
மூச்சிறைக்க ஓடி வந்தும்
பேருந்தைத் தவற விட்டிருந்தாள்
ஒரு பெண்

எந்தச் சலனமும் அற்று
தத்தம் வழிதொடர்ந்தனர்
சுற்றி இருப்போர்

தன் சுயத்துக்குப்
பேரழிவு நிகழ்ந்ததெனச்
சூன்யத்தைச் சுமந்தபடி
இடம் விட்டகல எத்தனிக்கிறாள் அவள்

இன்றிரவு அவள்
தாமதமாகத் தூங்கக்கூடும்

15 comments:

  1. ரொம்ப நல்லா இருக்கு சேரல்.

    ReplyDelete
  2. :(.. paavam illa...
    nalla kavanippu, nalla kavithai

    vidhya

    ReplyDelete
  3. நல்லா இருக்குங்க

    ReplyDelete
  4. நல்ல பதிவு சேரல்...

    ReplyDelete
  5. அழகாய் சொல்ல முடிந்திருக்கிறது சுய வலைக்குள் சிக்கிக் கிடப்பதன் தவிப்பை!!

    ReplyDelete
  6. நல்ல கவிதை சேரல்.

    ReplyDelete
  7. நல்லா இருக்கு.

    ReplyDelete
  8. rompa nalla irukku cheral

    mankuthiray

    ReplyDelete
  9. ரொம்ப அழகா சொல்லியிருகீங்க!

    ReplyDelete
  10. சேரல்.
    நல்லா இருக்கு

    ReplyDelete
  11. கருத்துகளுக்கு நன்றி நட்பே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete