Wednesday, November 18, 2009

பூனைகளும், சில நியதிகளும்

குறுக்கே ஓடிப்போகும்
பூனையைச் சபித்துச் செல்பவனைக்
கடந்துபோய்
நசுங்கிச் செத்த
பூனையின் விதியை
என்னவென்று சொல்வது?

***************

அதென்னவோ?
எப்போதும்
பக்கத்து வீட்டுப்பூனை
மதிற்சுவரில்
பத்திரமாய் நடந்து போய்
மறுமுனையை அடைந்தே விடுகிறது,
எப்புறம் விழுமெனக்
காத்திருப்பவனை ஏமாற்றி....

14 comments:

  1. ரெண்டும் நல்லா இருக்கு சேரல்.

    ReplyDelete
  2. ரொம்பப் பிடிச்சிருக்கு சேரல்.

    ReplyDelete
  3. மிகவும் அருமை..கூர்ந்த கவனிப்பு

    ReplyDelete
  4. 'எனக்கு பூனைகளைப் பிடிக்காது’ :)

    ReplyDelete
  5. இரண்டாவது கவிதையில்,கைகட்டி பார்த்திருக்கும் வில்லத்தனம் இயல்பாய் பதிவாகியிருக்கிறது.

    ReplyDelete
  6. நல்லாருக்கு சேரல்

    ReplyDelete
  7. வலைச்சரத்தில் நீங்களும் இருக்கிறீர்கள்.நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள் !!!

    ReplyDelete
  8. நல்லாயிருக்குங்க அருமை.

    நந்தாவுக்கு பூனை பிடிக்காதாம்.
    எனக்கு பூனைகளை மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  9. அடக்கடவுளே ... ஆனால் உங்கள் கவிதைகள் பிடிக்கும் என்று explicit-ஆக சொல்லியிருக்க வேண்டுமோ ...

    ReplyDelete
  10. its really nice and meaningful

    ReplyDelete