(இக்கவிதை 'அகநாழிகை' இதழின் முதல் இதழில் (அக்டோபர் 2009) பிரசுரமானது)
நல்லா கூர் தீட்டி
செவப்புக் கலரடிச்சு
'அம்மா' னு வாய் பொளந்து
சாராயம் ஊத்தி
ஊர் சுத்தித் தடையடிச்சு
துணியாட்டி வெறியேத்தி
ஓடவிட்டு கூட்டமாப் பாஞ்சு
வால் புடிச்சு மேல் இழுத்து
திமிலணச்சு
ஆம்பிளத்தனத்த நிரூபிச்ச பெறகு,
குரும்பாட்டுக் கறி தின்னு
திருப்தியா முடிஞ்சு போச்சு
இந்த வருச மாட்டுப்பொங்கலும்.
Request for Sekar...
ReplyDeletePlease enquire whether Seral was tied again to a tree...was the history repeated!!??
Three .s, 2 !s and ?s.
ReplyDeletePerson identified: Kalvettu Prem
- Gnanasekar