Thursday, November 05, 2009

உயிர்மை





















இயக்கமற்று
ஓய்ந்திருக்கின்றன மரங்கள்

எரிக்கும் வெயிலில்
உயிர் மீதமிருப்பதறியாது
உயிரிழந்து கொண்டிருக்கின்றன
இலைகள்

காற்றுங்கூடச்
சாவதற்கெத்தனிக்கிறது

உறைந்து கிடக்கவெனச்
சாபமிட்ட சூன்யக்காரியை
நொந்தபடி
விரிந்த சிறகசைத்துக்
கடந்து செல்கிறது
கடல் தாண்டி வரும்
ஒற்றைப்பறவை

உயிர் கொண்டெழுந்த காற்று
உயிர் பரப்புகிறது
ஒவ்வொரு இலையாக

8 comments:

  1. காத்திருந்து
    கண்கள் பூத்து
    புத்தி வறண்டு
    இன்று இறப்போம் என்ற தருவாயில்
    உயிர் நிரப்பிச் செல்கிறது உன் கவிதை !!

    உயிர் அருமை நண்பா !! ( 'உன் ' என்ற வார்த்தையை கவிதைக்காக சேர்த்தேன் , மன்னிக்கவும் !)

    உங்களை தொடர் விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன் ;-)

    ReplyDelete
  2. அருமையா இருக்கு சேரல்!

    ReplyDelete
  3. எங்கோ கூட்டிச் செல்கிறது உயிர் கொண்டு
    அருமையான கவிதை சேரல் ...
    வாழ்த்துக்கள்

    இது சிதறல் http://www.sidaralkal.blogspot.com/

    ReplyDelete