Friday, December 11, 2009

பிழை திருத்தம்

செக்கச் செவேலெனும் வானம்,
எழுந்து விறைத்து நிற்கும் குன்றுகள்,
பச்சைக் கச்சையில் நூலென மரங்கள்,
சத்தமெழுப்பாமல்
கரை புரண்டோடும் ஆறு

எல்லாம் சேர்ந்தழிக்கின்றன
மழையின் ஆயிரமாயிரம்
சிறுவிரல்கள்

மழை செய்யும்
பிழை திருத்தம்
வண்ணமயமாக,
செயலிழந்து ரசிக்கிறான்
வீதிகளில் வரைந்து
வாழ்பவன்

14 comments:

  1. நல்லா இருக்கு சேரல்.

    அனுஜன்யா

    ReplyDelete
  2. //செயலிழந்து ரசிக்கிறான்
    வீதிகளில் வரைந்து
    வாழ்பவன்//

    very nice

    ReplyDelete
  3. கவிதை நல்லாயிருக்கு சேரல்.. :-))

    ReplyDelete
  4. பிடிச்சிருக்கு சேரல்

    ReplyDelete
  5. ரொம்ப நல்லா இருக்கு சேரல்.

    ReplyDelete
  6. கோலமும் பொய்களோ?

    ReplyDelete
  7. //மழை செய்யும்
    பிழை திருத்தம்
    வண்ணமயமாக,
    செயலிழந்து ரசிக்கிறான்
    வீதிகளில் வரைந்து
    வாழ்பவன்//

    மழை மூலம் அந்த தெருவோர ஓவியனின் வழியை மிக அழகா சொல்லியிருப்பது மனதை தொட்டது ஸார்.

    ReplyDelete
  8. நல்லாருக்கு சேரல்

    ReplyDelete
  9. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது

    வெகு அருமை...

    ReplyDelete