Friday, January 22, 2010

ஞானம்

ஈரமேறிப்போன
மார்கழியிரவொன்றில்
வெதுவெதுப்புக்காகத்
தேர்ந்திருக்கலாம்
மாடிப்படிகளை

எதிர்பாராத
என் வருகையில்
வெடுக்கென்று பிடுங்கிய
தூக்கத்தின் மிச்சத்தைத்
தூக்கிச்செல்கிறதொரு நாய்
மருட்சியுடன்

இருளைத் துளைத்து
நிகழ்ந்திருக்க வேண்டாம்
இப்பின்னிரவிலென் வருகை

10 comments:

  1. ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி எழுத்தப் பார்த்து.

    நல்லாருக்குங்க.

    ReplyDelete
  2. நல்ல கவிதை.

    மனிதர்கள் எத்தனை பேரை நம் வருகை தொந்தரவு செய்கிறது! இப்படி நிறைய யோசிக்க வைத்தது....

    ReplyDelete
  3. :) நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  4. மிகவும் பிடித்திருந்தது இந்த கவிதை ..
    வாழ்த்துக்கள் சேரல்

    ReplyDelete
  5. //

    எதிர்பாராத
    என் வருகையில்
    வெடுக்கென்று பிடுங்கிய
    தூக்கத்தின் மிச்சத்தைத்
    தூக்கிச்செல்கிறதொரு நாய்
    மருட்சியுடன்

    //

    இந்த வரிகள் மட்டும் பிடித்திருக்கின்றன

    ReplyDelete
  6. ரொம்ப பிடிச்சிருக்கு சேரல் கவிதை.

    என்ன சேரல் அடிக்கடி பார்க்க முடியலை...வேலைப் பளுவா?

    ReplyDelete
  7. நல்லாயிருக்கு சேரல், கல்யாண்ஜி கவிதை படிச்ச மாதிரி.

    ReplyDelete
  8. இதுக்குத்தான் வெளக்கு வெச்சப்பறம் கடன் வாங்கக் கூடாதுன்னு பெரியவங்க சொன்னாங்க.

    ReplyDelete
  9. நன்றி நண்பர்களே!

    அன்பு பா.ரா....வேலைப்பளு தான். ஆனால் அலுவலக வேலைகள் இல்லை. சொந்த வேலைகள். வாழ்க்கையில் சில சுபமான மாற்றங்கள். அதுதான் :)

    முத்துவேல்,
    கல்யாண்ஜி மாதிரி என்றதும் மகிழ்ச்சி தான்....ஆனால், அந்த முனைப்பு எதுவும் எழுதும்போது இல்லை :)

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete