அப்படியே இருப்பது
சௌகரியம் என்றாலும்
எப்போதும் வாய்த்துவிடுவதில்லை
காய்ந்துகிடக்கும்
தார்ச்சாலைகளை
நக்கி நக்கி ஊர்ந்துபோகும்
வெயில் நாயைத்
துரத்தியடித்துப்
பெய்துவிடுகிறது மழை
மழை நனைத்த
எதுவும்
அதுவாகவே இருப்பதில்லை...
ஆனாலும்
மழையில்
உடைந்து விழும்
நீரின் ஒவ்வொரு துண்டும்
இருந்து விடுகிறது
நீராகவே
நல்லா இருக்கு சேரல்
ReplyDeleteஎன்ன தலைவா..? ரொம்ப நாளா ஆளைக் காணோம்..?
ReplyDeleteகவிதை வழக் கலக்.
நன்றி ஜோதி!
ReplyDeleteநன்றி ராஜு!
சொந்த வேலைகள், வாழ்க்கையில் மாற்றங்கள் இந்த இடைவேளைக்குக் காரணம். இன்னும் சில காலம் நீடிக்கும் இவ்விடைவேளை. மேலும் கொஞ்சம் அனுபவங்களுடன் மீண்டும் வருவேன் :)
-ப்ரியமுடன்
சேரல்
அருமைங்க, ரசித்துப்படித்தேன்...
ReplyDeleteநல்லா இருக்கு சேரல். நீண்ட இடைவேளை. முடிந்த போதெல்லாம் எழுதுங்கள்.
ReplyDeleteஅனுஜன்யா
திசைகளை அறிவிக்காமல் காணாமல் போகும் மேகம் ஒரு பெருங்கோடையின் உச்சிப் பொழுதில்
ReplyDeleteபெய்யும் மழை இந்த கவிதைக்காரனும் கவிதையும்
நன்றி பாலாசி...
ReplyDeleteநன்றி அனுஜன்யா....
தொடர்ந்து எழுதுவேன். இன்னும் சில நாட்களுக்குப் பிறகு :)
நன்றி நேசமித்ரன்....
அடை மழைக்காலமும், தகிக்கும் கோடையும் மாறி மாறி வருவதுதானே இயல்பு.... :)
-ப்ரியமுடன்
சேரல்
கவிதையும் பின்னூட்டங்களும் ரசனை/
ReplyDeleteகவிதை நல்லாயிருக்குங்க.
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு சேரல்,
ReplyDeleteதிருமணத்திற்கு வாழ்த்துகள். வர முயற்சிக்கிறேன்.
நன்றி வித்யா...
ReplyDeleteநன்றி கருணாகரசு...
நன்றி வாசு சார்... :)
-ப்ரியமுடன்
சேரல்
vaalthukkal seral ;-)
ReplyDeleteநல்லாயிருக்குங்க கவிதை.
ReplyDeleteநாளாக நாளாக உங்கள் நடை மெருகேறிக்கொண்டே வருகிறது. அருமை தல
ReplyDeletepoetic thought.Nice poem.
ReplyDeleteசாரல் அடிக்கிறது, சேரல். :)
ReplyDeleteNice one.
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு. மற்ற கவிதைகளுடன் இதுவும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி. அதற்கான தகுதியும் இருக்கு.
ReplyDeleteசெமையா இருக்கு பாஸ் :)
ReplyDelete