Wednesday, April 28, 2010

நிர்வாணம்




நிர்வாணியாய்த் திரிந்தவனுக்குக்
கவலைகள்
என்றெதுவுமில்லை

பின்
நிர்வாணம் குறித்துக்
கவலை வந்தது

நிர்வாணத்தை இழந்தவனுக்கு
ஆயிரம் கவலைகளோடு
சேர்ந்துகொண்டன,
இழந்ததை
அறிவதன் மீதானதும்,
அடைவதன் மீதானதும்

தன்னியல்பு திரிந்த
கவலையில்
ஆடைகட்குள் ஒளிந்தே கிடக்கிறது
நிர்வாணம்

9 comments:

  1. அருமையா இருக்கு நண்பா! வாழ்த்துக்கள்... :-)

    ReplyDelete
  2. //
    தன்னியல்பு திரிந்த
    கவலையில்
    ஆடைகட்குள் ஒளிந்தே கிடக்கிறது
    நிர்வாணம்
    //
    அருமையான வரிகள்

    ReplyDelete
  3. ஒழிந்திருக்கும் நிர்வாணத்தை தேடுவதில்தான் எத்தனை ஆர்வம் நடைமுறையில்...

    நல்ல கவிதை சேரல்....

    ReplyDelete
  4. நல்ல கவிதை சேரல்

    ReplyDelete
  5. நன்றி நண்பர்களே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  6. ஆதாம் காலத்துக் கவிதை :-) எளிமையும் அருமையும் சேர்வது மிகவும் கடினம் ... இங்கே எப்பொழுதுமே சாத்தியமாகிறது.

    ReplyDelete
  7. மிக அருமையான கவிதை..

    ReplyDelete