புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Saturday, March 07, 2020

முடிவுறா உரையாடல்

கோடைக்காலத்தின்
பிற்பகல் தனிமையில்
முன்னறிவிப்பின்றி பிரவேசிக்கும்
தூரத்துச் சொந்தக்காரனை
வரவேற்கும் மூதாட்டியென
என்னை அணைத்துக் கொள்கிறது
கடல்

இருவருக்கும்
பொதுவான சிலரும்
பொதுவான சிலதுகளும்
நிறைத்திருக்கின்றன
எங்கள் உரையாடல்களை

எதேச்சையாக
நிகழ்ந்துவிடக்கூடும்
பிறிதொரு சந்திப்பிற்காகக்
காத்திருக்கத் தொடங்குகிறோம்
பிசுபிசுப்பான
பிரிவுகளின் நிமிடங்களில்.

-கடலோடு உரையாடுபவன்

No comments: