புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, April 29, 2009

எழு(த்)து

பாடுபொருள்கள்
ஏதுமற்று,
சூன்யமாகிப்போன
ஓரிரவின்
வெப்பம் தாங்காமல்
ஆழ்மனத்தைக்
கிளறிக் கிளறி
நினைவுகளைத்துழாவி
எதுவும் சிக்காமல்,
வார்த்தைகளைக்
கெஞ்சியழைத்து வந்து
தப்பிப் பிழைத்தோடிய
தாள்களையும்
எழுதுகோலையும்
துன்புறுத்தி
எழுதிக்கொண்டிருந்தேன்
நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்
'இதை'

15 comments:

anujanya said...

writer's block வருவது சகஜம்தான். அதையும் படைப்பாக்குவது திறமை. உங்களுக்கு இருக்கு.

அனுஜன்யா

பிரவின்ஸ்கா said...

நன்றாக இருக்கிறது

ராஜ நடராஜன் said...

கருப்பு வெள்ளை இனி நினைவில் நிற்கும்.

Unknown said...

அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...அருமை...

யாத்ரா said...

அருமையா இருக்கு சேரல், நல்ல கவிதை.

bhupesh said...

:) :) :)

ஆ.சுதா said...

நல்லா இருக்கு.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்

மண்குதிரை said...

நல்ல கவிதை சேரல். ரசித்தேன்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா இருக்குங்க.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@மண்குதிரை, @ஜ்யோவ்ராம் சுந்தர்

நன்றி!
வருகைக்கும், கருத்துக்கும்.

-ப்ரியமுடன்
சேரல்

நாடோடி இலக்கியன் said...

நல்லா இருக்குங்க

Mahesh said...

அருமைங்க...

நேசமித்ரன் said...

இந்தக் கவிதையும் பிடித்திருக்கிறது

Anonymous said...

நல்லா இருக்குங்க சேரல். நம்ம பரிசலும் இன்னைக்கு ஒன்றுமில்லாத கவிதை ஒண்ணு எழுதியிருக்கார்.