புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, August 02, 2010

கவிதையோடு வாழ்தல்

பேனா எடுத்து வா
என்றவனிடம்
தேடிக்கொண்டிருப்பதாய்ச் சொல்கிறாள்

காத்துக் கொண்டிருக்கிறது
என்னைப் போலவே
கவிதையும்

எழுதி வைக்கும் வரை
மறந்துபோகாமலிருக்கும்
கவிதையைப் படைப்பது பாக்கியம்

இன்னொரு சிந்தனை
இடையூறாமலிருப்பதும் உத்தமம்

என்ன செய்தும்,
இன்னும் வாய்க்கவில்லை
இடைப்பட்ட நொடிகளில்
கவிதையோடு வாழ்தல்