புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, November 02, 2011

இடப்பெயர்ச்சி

இறந்து கொண்டிருக்கிறவனின்
கைகளை
அழுந்தப் பற்றிக்கொள்கிறேன்
கைகளினூடே
ஈருடல்களில்
பாய்ந்து கலக்கின்றன
உயிர்மையும், மரணமும்

பாத்திரம்

எவ்வளவு எடுத்தாலும் குறையாத
அட்சயப் பாத்திரத்துடன்
வந்து சேர்ந்தாள் மணிமேகலை

பிழையில்லை

எவ்வளவு இட்டாலும் நிறையாத
பாத்திரங்கள் நிறையவே இருக்கின்றன
எம்மிடம்