புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, October 15, 2012

மிக
நேர்த்தியாக அவிழ்க்கப்பட்டு
மடிப்பு கலையாதிருந்த
கருஞ்சாந்து நிற அங்கி

தோலுடை மட்டும் தரித்துக்
கலைந்து கிடந்த
அவள்

ஓவியன் ஒருவனைக்
கண்களுக்குள் வாங்கியிருந்த
அவன்

புணர்ச்சி விகுதி
சிருங்கார ஓவியம்
ஆண்மையற்றவனின் கனவு

ஏதேனுமொரு தலைப்பிட்டு
வாசித்துக் கொள்ளுங்கள்
இதை

Tuesday, October 09, 2012

நீலம்

நீலத்தை ரசிக்கவெனக்
கூடியிருந்தவர்கள் முன்
விரிந்து கிடந்தது
வானம்

அவரவரும்
ரசித்து நீங்கினார்கள்
அவரவர் நீலத்தை