கூடடைய விரும்பாததொரு
கரும் பறவை
இரை தேடிச் செல்லும்
வழியெங்கும்
ஒற்றையடிப் பாதைகளை
பிரசவித்துச் செல்கிறது
-கவிஞர் கார்த்திக் முருகன்
(http://karthikmurugan.blogspot.com/)
Tuesday, December 22, 2009
புல்லாங்குழல்
இங்கேயே
இருக்கின்றதொரு புல்லாங்குழல்
நெடுங்காலமாய்
மேலோடும்
விரல்கள் மட்டும்
இடம் பெயர்கின்றன
இங்கேயே
இருக்கின்றதொரு புல்லாங்குழல்
நெடுங்காலமாய்
உள்ளிழுக்கும் காற்றையும்
வெளிவிடும் இசையையும் போலவே....
இருக்கின்றதொரு புல்லாங்குழல்
நெடுங்காலமாய்
மேலோடும்
விரல்கள் மட்டும்
இடம் பெயர்கின்றன
இங்கேயே
இருக்கின்றதொரு புல்லாங்குழல்
நெடுங்காலமாய்
உள்ளிழுக்கும் காற்றையும்
வெளிவிடும் இசையையும் போலவே....
Tuesday, December 15, 2009
நகரும் படிகளும்
ஏறவோ இறங்கவோ
செய்தோம்
அப்படியே இருந்தன
படிகள்
நடக்கும் வலுவற்றவர்களாக்கும்
இந்த
நகரும் படிகளைத்தான்
பிடிப்பதேயில்லை
செய்தோம்
அப்படியே இருந்தன
படிகள்
நடக்கும் வலுவற்றவர்களாக்கும்
இந்த
நகரும் படிகளைத்தான்
பிடிப்பதேயில்லை
Friday, December 11, 2009
பிழை திருத்தம்
செக்கச் செவேலெனும் வானம்,
எழுந்து விறைத்து நிற்கும் குன்றுகள்,
பச்சைக் கச்சையில் நூலென மரங்கள்,
சத்தமெழுப்பாமல்
கரை புரண்டோடும் ஆறு
எல்லாம் சேர்ந்தழிக்கின்றன
மழையின் ஆயிரமாயிரம்
சிறுவிரல்கள்
மழை செய்யும்
பிழை திருத்தம்
வண்ணமயமாக,
செயலிழந்து ரசிக்கிறான்
வீதிகளில் வரைந்து
வாழ்பவன்
Subscribe to:
Posts (Atom)