புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, December 22, 2009

புல்லாங்குழல்

இங்கேயே
இருக்கின்றதொரு புல்லாங்குழல்
நெடுங்காலமாய்

மேலோடும்
விரல்கள் மட்டும்
இடம் பெயர்கின்றன

இங்கேயே
இருக்கின்றதொரு புல்லாங்குழல்
நெடுங்காலமாய்
உள்ளிழுக்கும் காற்றையும்
வெளிவிடும் இசையையும் போலவே....

4 comments:

மண்குதிரை said...

நல்லா இருக்கு சேரல்

பா.ராஜாராம் said...

நல்ல கவிதை சேரல்.

ny said...

நன்றி சேரல்!
நிச்சயம் புல்லாங்குழல்
இங்கேயே இருக்கும் நண்பா :)

க.பாலாசி said...

இக்கவிதை ஒரு இசை... எவ்வழி ரசித்து எழுத அருமையென்று....