புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, February 27, 2006

ஒரு சின்னஞ்சிறு கதை

மேலிருந்து தவறி விழுந்தபோது, அவனோடு பலமாக மோதிக்கொண்டேன். என்னை நானே திட்டிக் கொண்டு எழுந்து போனேன். போன முறை சண்டை போட்ட யாரோ போலல்லாமல் அமைதியாக எழுந்து போய்விட்டான் அவனும், என்னுடனேயே!

Thursday, February 23, 2006

நடப்பது

நெரிசலுக்கிடையே
நான்நீண்ட நேரமாய்ப்
பார்த்துக்கொண்டிருக்கும் பெண்
எதேச்சையாய்
என் முகம் பார்த்துவிடுவாளோ?

காலியாய் இருக்கும்
பக்கத்து சீட்டில்
குடிகாரன் எவனும்
உட்கார்ந்து விடுவானோ?

கூட்டமாய் மாதர்கள்
நிற்கும் நிறுத்தத்தில்
என்னை அறியாமல்
இறங்கிவிடுவேனோ?

அடிக்கடி வந்து போகும்,
சில நொடி தூக்கத்தில்
சில்லறை பாக்கி
மறந்து போவேனோ?

பயத்தினூடே
ரசிக்கப்படாமலேயே கழிகிறது
ஒவ்வொரு பேருந்துப் பயணமும்...
-----------------------------------
சுகுணா திவாகரின் "தீட்டுப்பட்ட நிலா" படித்தபின்,
அவரைப் போலவே முயற்சி செய்து.... சூடுபட்டுக் கொண்டேன்.

************************************
இதன் "மூலம்" அறிந்த நண்பர்களுக்கு.....
நான் எழுதியதை அப்படியே வெளியிடும் தைரியம் இன்னும் வரவில்லை.

Monday, February 06, 2006

அசைவம்

அசைவமாகிறது மர(ன)ம்,
இறைச்சி விற்கும் தெருவில்
இரவலனாய் நான்.

படித்ததில் பிடித்தது...

அந்த விபத்து நடந்தவுடன்,
எல்லோரும் ஒரு வினாடி ஸ்தம்பித்து,
மீண்டும் நகர்ந்தனர்.
அன்றிரவு,
அவர்கள் ஒரு வினாடி
தாமதமாய்த் தூங்கப் போயினர்.