விடுதலையாகிறது காற்று
வெடித்துச் சிதறுகிறேன் நான்
அமைதியாக உருவாக்கப்படுகிறது
அடுத்தொரு நீர்க்குமிழி.
Wednesday, July 12, 2006
Wednesday, July 05, 2006
இது என்ன காதல்....?
இன்றோடு
என்னைப்பிரிகிறாய் நீ!
உன்
தனிமையில்
துணையாய் வந்தவன்
தானே நான்!
நம் மூச்சுக்காற்றைப்
பரிமாறிக் கொண்ட கணங்களில்
என் உயிரின் நீளம்
அதிகரிப்பதை
உணர்ந்திருக்கிறேனே
நான்!
நீ முத்தமிட்டனுப்பிய
காற்றை
நுரையீரலில்
நிரைத்துக் கொண்டு
திரிந்தேனே!
உன் செல்லத் தூறலில்
நனைவதற்காக
மழை விட்டபொழுதுகள் வேண்டி
அலைந்தவன் தானே நான்!
எல்லோருக்கும் தெரிந்து தானே
வளர்ந்தது நம் உறவு?
இன்றோடு என்னிலிருந்து
பிரிக்கப்படுகிறாய் நீ!
அது சரி,
கட்டுபவனைப் போல
வெட்டுபவனுக்கும்
புரிவதில்லை
ஒரு முன்னாள் காதலனின் சோகம்!
என்னைப்பிரிகிறாய் நீ!
உன்
தனிமையில்
துணையாய் வந்தவன்
தானே நான்!
நம் மூச்சுக்காற்றைப்
பரிமாறிக் கொண்ட கணங்களில்
என் உயிரின் நீளம்
அதிகரிப்பதை
உணர்ந்திருக்கிறேனே
நான்!
நீ முத்தமிட்டனுப்பிய
காற்றை
நுரையீரலில்
நிரைத்துக் கொண்டு
திரிந்தேனே!
உன் செல்லத் தூறலில்
நனைவதற்காக
மழை விட்டபொழுதுகள் வேண்டி
அலைந்தவன் தானே நான்!
எல்லோருக்கும் தெரிந்து தானே
வளர்ந்தது நம் உறவு?
இன்றோடு என்னிலிருந்து
பிரிக்கப்படுகிறாய் நீ!
அது சரி,
கட்டுபவனைப் போல
வெட்டுபவனுக்கும்
புரிவதில்லை
ஒரு முன்னாள் காதலனின் சோகம்!

Tuesday, July 04, 2006
குழூஉக்குறி
அப்போதெல்லாம்
யாரையும் பெயர் வைத்து
அழைத்ததாய் ஞாபகம் இல்லை
ராமாயணக்கதை கேட்டதிலிருந்து
சூர்ப்பனையாகிப் போயிருந்தான்
வெங்கடேசன்
கோடை காலம் வந்தாலே
பாட்டி வீட்டில் அடைக்கலம் சேரும்
வேணுவுக்குக்
குள்ளப்பாண்டி என்று பெயர்
வைத்ததாய் ஞாபகம்
இப்படித்தான்....
நடுவிரல் சித்தப்பா
சுடுதண்ணி சுப்பு
தவக்களை
இன்னும் கூட
இப்படியேதான்
இருந்திருப்பேன்,
கல்லூரி காலத்தில்
"கரி"
என்பது
எனக்கான
குழூ உக்குறியாய்
இல்லாதிருந்தால்...
யாரையும் பெயர் வைத்து
அழைத்ததாய் ஞாபகம் இல்லை
ராமாயணக்கதை கேட்டதிலிருந்து
சூர்ப்பனையாகிப் போயிருந்தான்
வெங்கடேசன்
கோடை காலம் வந்தாலே
பாட்டி வீட்டில் அடைக்கலம் சேரும்
வேணுவுக்குக்
குள்ளப்பாண்டி என்று பெயர்
வைத்ததாய் ஞாபகம்
இப்படித்தான்....
நடுவிரல் சித்தப்பா
சுடுதண்ணி சுப்பு
தவக்களை
இன்னும் கூட
இப்படியேதான்
இருந்திருப்பேன்,
கல்லூரி காலத்தில்
"கரி"
என்பது
எனக்கான
குழூ உக்குறியாய்
இல்லாதிருந்தால்...
Subscribe to:
Posts (Atom)