புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, April 28, 2010

நிர்வாணம்




நிர்வாணியாய்த் திரிந்தவனுக்குக்
கவலைகள்
என்றெதுவுமில்லை

பின்
நிர்வாணம் குறித்துக்
கவலை வந்தது

நிர்வாணத்தை இழந்தவனுக்கு
ஆயிரம் கவலைகளோடு
சேர்ந்துகொண்டன,
இழந்ததை
அறிவதன் மீதானதும்,
அடைவதன் மீதானதும்

தன்னியல்பு திரிந்த
கவலையில்
ஆடைகட்குள் ஒளிந்தே கிடக்கிறது
நிர்வாணம்

9 comments:

அன்பேசிவம் said...

அருமையா இருக்கு நண்பா! வாழ்த்துக்கள்... :-)

VELU.G said...

//
தன்னியல்பு திரிந்த
கவலையில்
ஆடைகட்குள் ஒளிந்தே கிடக்கிறது
நிர்வாணம்
//
அருமையான வரிகள்

க.பாலாசி said...

ஒழிந்திருக்கும் நிர்வாணத்தை தேடுவதில்தான் எத்தனை ஆர்வம் நடைமுறையில்...

நல்ல கவிதை சேரல்....

நேசமித்ரன் said...

நல்ல கவிதை சேரல்

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

:) unmai!!!!

RaGhaV said...

அருமை.. :-))

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்

ரெஜோ said...

ஆதாம் காலத்துக் கவிதை :-) எளிமையும் அருமையும் சேர்வது மிகவும் கடினம் ... இங்கே எப்பொழுதுமே சாத்தியமாகிறது.

Unknown said...

மிக அருமையான கவிதை..