புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, June 27, 2011

காலை

யாரும் உறங்கக்கூடும்
யாரும் விழித்திருக்கக் கூடும்
நான் நடந்து போகிறேன்

ஒரு வழிப்பாதையை
இருவழியாக்கிக் கடந்து போகும்
மாநகரப் பேருந்தை
முட்டுக் கொடுத்துத் தூக்கி
யுடைந்த காலுடன் விழுகிறது
சாலை நாய்

பதைத்துப் போய்க்
கூர்ந்து பார்த்து
நின்று நகர்கிறது
என்னைப் போல்
காலை வெயிலும்

2 comments:

RaGhaV said...

ஆழம்..

Anonymous said...

ஆஹா..!