புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Sunday, January 26, 2020

மனிதாசனம்

இரண்டு கால்களில்
நின்ற வண்ணம்
யோகா செய்யத்
தொடங்கியிருந்தது
ஒரு நாய்

முதலில்
முன்னிரு கால்கள்
பிறகு
பின்னிரு கால்கள்

தீவிர பயிற்சியினிடையே
மனிதாசனம் என்றதற்குப்
பெயர் சூட்டியது

ஆண்டின் இறுதிக்குள்
ஐந்து கிலோ
எடை குறைப்பதெனச்
சபதமேற்றிருந்தது அது

உழைப்பற்ற தன் 
உடலின் எடை குறைக்க 
மாரத்தானும் 
மலையேற்றமும் 
ஜும்பா நடனமும் 
இத்யாதி இத்யாதிகளும் 
முன்பே முயன்று பார்த்திருந்ததாம் 

குளிரூட்டப்பட்ட 
அறையைத் தவிர்த்து 
எடையை வியர்வையாகக் கரைக்கும் 
முனைப்பும் இருந்ததாகப் பேச்சு 

இரவு நேரப் 
பெடிக்ரீயில் ஒரு பகுதி 
மீதம் வைப்பதாகக் 
கூடுதல் தகவல் 

பின்னர்
ஒரு நாளின்
இருள் பிரியாத அதிகாலையில்
கடற்கரையில் கைவீசி
நடக்க ஆரம்பித்திருந்தது ,
உறக்கம் கலையாத
ஒரு மனிதனை இழுத்துக்கொண்டு 

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

கடைசி வரிகள் செம!

நல்லதொரு கவிதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.