புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Saturday, February 15, 2020

சவப்பெட்டியின் வாசகன்

ஒரு
சவப்பெட்டியாகத்தான்
இருந்திருக்கிறது
அந்த கவிதைப் புத்தகம்

கிழித்த பக்கத்தில்
என்ன கவிதை
இருந்திருக்கக்கூடும்

கவிதை வாசிக்க வந்தா
நசுங்கிச் செத்துப் போனாய்
நீ?

உன் மரணத்தின்
கடைசி நொடியில்
நான் எந்தக் கவிதையின்
சிலாகிப்பில் இருந்திருப்பேனோ

உன் பிணத்தை
மென்மையாக அப்புறப்படுத்திய நாளில்
நான் கவிதையெதுவும் வாசிக்கவில்லை.

No comments: