புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, September 23, 2010

ஐக்கியமானவன்

சுதந்திர தேவி சிலையின்
உயரம் மீண்டுமொருமுறை அளந்தான்

நயாகராவின் துளிகளில் ஒன்றை
கையில் வைத்தலைந்த கதை சொன்னான்

இரவு நடன விடுதியில்
உடன் மதுவருந்தி
முயங்கிக் கிடந்து சென்ற
வெள்ளைக்காரப் பெண்ணின்
உடல் வாசம் சொன்னான்

டிஸ்னி உலகின்
பொம்மை மனிதர்களுடன்
பிடித்துக்கொண்ட
புகைப்படம் கொடுத்தான்

உயிர்த்தளம் குளிரும்
மைனஸ் டிகிரியின்
நீளம் தெரிவித்தான்

சொர்க்கவாசல் எப்போதும்
திறந்தேயிருக்கிறது உனக்கும்
என்றான் நண்பன்
மீண்டும் நுழையுமுன்

எனக்கென்னவோ
அவன் பத்தாம் வகுப்பில்
என்னைவிடக் குறைவாய்
மதிப்பெண் எடுத்ததே
அடிக்கடி நினைவில் வந்துபோனது

10 comments:

Unknown said...

This is really nice.....the feeling of a common man like me......

Balakumar Vijayaraman said...

அசத்தல்.

ny said...

same blood!

க.பாலாசி said...

ரொம்ப நல்லாயிருக்குங்க சேரல்...

Katz said...

Good one...

bhupesh said...

எட்டயபுரம் பற்றியும், பழவேற்காடு பற்றியும் கூறியிருப்பாய்

கமலேஷ் said...

அருமையா இருக்கு..

கமலேஷ் said...

ஏன் பிளாக்கர் தீமை மாத்திடீங்க..
கருப்ப வெள்ளைளையும் , வெள்ளைய கருப்புளையும்
"கருப்பு வெள்ளை" -ன்னு நீங்க எழுதி இருந்தது பார்க்கவே ஒரு கவிதை மாதிரி அழாக இருந்தது.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே!

அன்பிற்கினிய கமலேஷ்,

நன்றி! அது எனக்கும் பிடித்தே இருந்தது. ஒரு மாற்றம் தேவைப்பட்டதால் அதை நீக்கிவிட்டேன். மீண்டும் அதேபோல் மாற்ற வாய்ப்பு வரும்போது மாற்றுகிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

Anonymous said...

very very intresting sera