புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Saturday, March 26, 2011

பெய்யலானது

உலகின்
மிகச்சிறந்த
முத்தத்தை இடுவதென நாம்
முடிவு செய்திருந்த தினத்தில்
பெய்யலானது மழை

மழையைக் காதலும்
காதலை மழையும்
நனைக்குமழகை
ரசித்திருந்த பொழுதில்
அவசரமாக ஜனித்துத் தொலைத்தது
நம் முத்தம்

இட்டேனா
பெற்றேனா
என்பதறியாது நிகழ்ந்துவிட்ட
முத்தத்தை
உன்னுதடுகள் எப்படி
உணர்ந்திருக்கும்
என்ற ஞானமற்று
உலரத் தொடங்குகின்றன
என்னுதடுகள்,
கோடை மழையின்
ஒரு துளி மட்டும் பருகிய
வண்டலென

1 comment:

Anonymous said...

superp