புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Saturday, April 04, 2009

மிதந்து போகும் புன்னகை

அந்தக்
குறுகிய சாலையின்
மறுமுனையினின்றும்
புன்னகைக்கும்
அவள்,
பரிச்சயமற்றவர்களைப் பார்த்தும்
புன்னகைக்கும்
உன்னை நினைவு படுத்தினாள்.
நினைத்துக்கொண்டேன்.
உன்
புன்னகையில்
குழம்பியவர்களுக்கு
யார் யாரை
நினைவுபடுத்தினாயோ
நீ!

9 comments:

மண்குதிரை said...

ungkaludaiya paarvai viththiyasamaana unarvaiththarukiRathu.

vaazhththukkal nanbaree.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பரே!

தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும்.

-ப்ரியமுடன்
சேரல்

யாத்ரா said...

மனசு ஜில்லுனு, நல்லா இருக்குங்க கவிதை

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பரே!

உங்கள் வருகையை மீண்டும் எதிர்பார்க்கிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

ச.பிரேம்குமார் said...

//உன்
புன்னகையில்
குழம்பியவர்களுக்கு
யார் யாரை
நினைவுபடுத்தினாயோ
நீ! //

அருமை :)

ச.பிரேம்குமார் said...

//நினைத்துக்கொண்டேன்.//

இந்த வரியை எடுத்துவிட்டால் கவிதை இன்னும் அழகுறுமே :)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@பிரேம்குமார்

நன்றி நண்பரே!

நீங்கள் சொன்ன பின் யோசிக்கிறேன். அழகாகத்தான் இருக்கிறது. ஆனால், தன் இயல்போடு இருப்பதுதான் யதார்த்தமான கவிதை என்பது என் எண்ணம். தோன்றியது எப்படியோ அப்படியே இருக்கட்டுமே!

-ப்ரியமுடன்
சேரல்

anujanya said...

:) - நல்லா இருக்கு

அனுஜன்யா

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@அனுஜன்யா

நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்