புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, July 14, 2009

சிரிப்பும் சேர்ந்தது

விழுந்து புரண்டு சிரிக்கிறது

கடைவாயில் நுரைபொங்க
எச்சில் ஒழுக
ஒரு குழந்தையென நகைக்கிறது

தூந்திர நிமிஷங்களை
மறந்துவிட்டு
உருகியுருகிச் சிரித்தோடுகிறது

பேரிரைச்சலோடு எழுவதும்
பெருமைகள் அற்று விழுவதும்
இயல்பே எனச்சொல்லி
பெருங்கூச்சலிடுகிறது கடல்

-கடலோடு சிரிப்பவன்

19 comments:

நட்புடன் ஜமால் said...

தலைப்பு வேறு இருந்து இருந்தால் இன்னும் இரசித்து இருக்கலாம.

[[பேரிரைச்சலோடு எழுவதும்
பெருமைகள் அற்று விழுவதும்
இயல்பே எனச்சொல்லி
பெருங்கூச்சலிடுகிறது கடல்]]

மிக அருமை.

பிரவின்ஸ்கா said...

//கடைவாயில் நுரைபொங்க
எச்சில் ஒழுக
ஒரு குழந்தையென நகைக்கிறது //

கவிதை நல்லாருக்கு.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

அகநாழிகை said...

சேரல்,
கவிதை நன்றாக இருக்கிறது.

‘தூந்திர‘ என்ற வார்த்தையின் பொருள் என்ன..

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி ஜமால்

நன்றி பிரவின்ஸ்கா

நன்றி அகநாழிகை
தூந்திரம் எனும் சொல், துருவப்பகுதிகளைக் குறிக்கும்.

-ப்ரியமுடன்
சேரல்

thamizhparavai said...

அழகு....
நான் கேட்க நினைத்ததை வாசு சார் கேட்டு தெளிவடைய வைத்து விட்டார்...

Vidhoosh said...

ரொம்ப அழகா எழுதுறீங்க சேரல். வாழ்த்துக்கள். :)
--வித்யா

மதன் said...

நல்ல கவிதை.. வாழ்த்துக்கள்!

ny said...

beautiful one!

i'll go with jamal.. a title without revealin 'sea' would hv bn gud either!!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

ஜமால் மற்றும் கார்த்தி,

உங்கள் கருத்து மிகச்சரி. ஏற்றுக்கொள்கிறேன். தலைப்பை மாற்றிவிடுகிறேன். நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்

நந்தாகுமாரன் said...

கடல் காட்சி நன்றாக இருக்கிறது சேரல்

ச.முத்துவேல் said...

சொல்ல நினைத்தது, கேட்க நினைத்தது எல்லாம் எனக்கு முன்னமேயே முடித்துவிட்டார்கள்.மீண்டும்..
நல்லாருக்கு.

யாத்ரா said...

நல்லா இருக்கு சேரல்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி தமிழ்ப்பறவை

நன்றி Vidhoosh

நன்றி மதன்

நன்றி Nundhaa

நன்றி முத்துவேல்

நன்றி யாத்ரா

-ப்ரியமுடன்
சேரல்

மண்குதிரை said...

நல்லாயிருக்கு சேரல்

நளன் said...

:)))

கோகுலகிருஷ்ணன் கந்தசாமி said...

அருமை...

கதிரவன் said...

//கடைவாயில் நுரைபொங்க
எச்சில் ஒழுக
ஒரு குழந்தையென நகைக்கிறது //

மிக அருமையான உருவகம் !

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி மண்குதிரை

நன்றி நளன்,
தொடர்ந்து வாருங்கள்

நன்றி கோகுல்

நன்றி கதிரவன்,
தொடர்ந்து வாருங்கள்

-ப்ரியமுடன்
சேரல்

"உழவன்" "Uzhavan" said...

//கடைவாயில் நுரைபொங்க
எச்சில் ஒழுக
ஒரு குழந்தையென நகைக்கிறது//
 
அழகா சொன்னீங்க சேரல்.