புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, October 09, 2009

வெளியில் நனையும் மழை

மழை வந்துவிட்டது
போலிருக்கும் பொழுதின்
முந்தைய கணங்களில்
வீடு சேரும்
முனைப்பிலிருக்கிறேன்

மழை,
மழை கோட்,
ரோஜா வர்ணக்குடை,
மழைக்கதை பேசும் தோழி,
எப்போதோ மறந்துவிட்டு
நனைந்துபோன
கொடியுலர்த்திய ஆடைகள்,
என்பதாக வியாபிக்கிறது
மழை,
நினைவெங்கும்

முதல் துளி,
தலையோ,
தரையோ தொடுமுன்
பத்திரப்படுத்துகிறேன்
கூரைச்சுவற்றின் கீழ்
என்னை

வெளியில்
தன்னையே நனைத்துக்கொண்டிருக்கும்
மழை குறித்துச்
சிந்தனையில்லை

இனி நான்
நிம்மதியாகத்
தேநீர் அருந்தலாம்

12 comments:

Anonymous said...

Dear Sera,

This is really great.....

Rgds,
Murali

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்கு சேரல்

மண்குதிரை said...

nice nanba

நேசமித்ரன் said...

சேரல்
மிக நுண்ணிய பாகமுள்ள மனசின் அறைகளில் அம்மாவின் ஒரு பழைய நூல் புடவை வாசனையை பரப்புகிறது இந்தக் கவிதை தரும் கூட்டுணர்வு

anujanya said...

நல்லா இருக்கு சேரல்.

அனுஜன்யா

நந்தாகுமாரன் said...

great ... cool ... rain is a wonder as is this poem ... wow cheral

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க கவிதை.

thamizhparavai said...

என்னால சொல்ல முடியலை, நேசமித்ரன் சொல்லிட்டாரு...
பிடித்திருந்தது...

Unknown said...

கடைசியா நீ எழுதிய ரெண்டு கவிதைகளும் சரியில்லை. (நீ சொல்லும் படி சொல்லனும்னா கமர்ஷியல்...) எதோ ஒரு அவசரகதியில எழுதி இருக்க போல...

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்கு சேரல்

மாதவராஜ் said...

நல்லாயிருக்கு.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கருத்துகளுக்கு நன்றி நட்பே!

-ப்ரியமுடன்
சேரல்