புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, October 20, 2009

மாறுதல் - ஈரோடு கதிர்

நண்பர் நர்சிம் மூலம், இந்த வலைப்பூவைத் தெரிந்துகொண்டேன். முதலில் நர்சிம்முக்கு நன்றி. சிந்தனையைத் தூண்டும் பல கட்டுரைகளை வழங்கியிருக்கிறார் நண்பர் ஈரோடு கதிர். இயற்கை, வாழ்வு முறை, சமூகத்தின் மீதான அக்கறை என்பதாக விரிகின்றன இவர்தம் கட்டுரைகள். நான் சிலவற்றை வாசித்திருக்கிறேன். இன்னும் வாசிக்க நிறைய இருக்கின்றன. எனக்குப் பிடித்த சில ஆக்கங்களை இங்கு பட்டியலிட்டிருக்கிறேன். என் மூலம் குறைந்தது ஒருவருக்கேனும் இந்த வலைப்பூ அறிமுகமாகுமெனில் மிக மகிழ்வேன்.

சினிமாவும் மூச்சுத்திணறலும்

ஒரு பிடி சோறு


நான் நிறுத்த வேண்டும்

-ப்ரியமுடன்
சேரல்

8 comments:

பிரபாகர் said...

என் நண்பருக்கு இன்னுமொரு அறிமுகம்.. சந்தோஷமாய் உணர்கிறேன்.... நன்றிங்க...

பிரபாகர்.

vasu balaji said...

கதிருக்கு இன்னுமொரு அறிமுகம். நன்றிங்க.

க.பாலாசி said...

//என் நண்பருக்கு இன்னுமொரு அறிமுகம்.. சந்தோஷமாய் உணர்கிறேன்.... நன்றிங்க...//

எங்கள் நண்பருக்கு என்று சொல்வது நன்று...நன்றி....

ஈரோடு கதிர் said...

இனிய சேரல்..

நீங்களும், நர்சிம் அவர்களும் கொடுத்திருக்கும் அறிமுகம் என்னை இன்னும் புதிய நபர்களிடம் எடுத்துச் செல்லும்.


இது இன்னும் என்னைச் செம்மைப் படுத்த உந்து சக்தியாக இருக்கிறது.

பணிவான நன்றிகள் உங்களுக்கும், நர்சிம் அவர்களுக்கும்

தங்கள் பின்னூட்டங்கள் அர்த்தம் பொதிந்தவைகள் சேரலாதன்...

மீண்டும் நன்றிகள்

மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட பிரபா, பாலா, பாலாஜி ஆகியோருக்கும் நன்றிகள்

நர்சிம் said...

சாரல் சேரல்!

ப்ரியமுடன் வசந்த் said...

குரு பார்வை பெற்ற கதிருக்கு வாழ்த்துக்கள்

குருவே சரணம்

சேரலுக்கும் நன்றிகள்

Unknown said...

ஈரோடு கதிரைப் படித்தேன் அருமை சேரல்...

பா.ராஜாராம் said...

எனக்கும் சமீபமாகவே கதிரை பார்க்க வாய்த்தது,சேரல்.பார்த்துக்கொண்டே இருக்கிறேன்...உயர்ந்துகொண்டே இருக்கிறார்.விரட்டிக்கொண்டே இருக்கிறேன்...அர்த்தங்கள் நிரம்பிய பகிர்வு!