புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, November 15, 2005

அடப்போங்கப்பா..!!!

நல்ல மழை...!
தேனீர் வாசம் இதயம் இறங்குகிறது
மூளையினுள்ளே புது
புதுக்கவிதையின் ஓட்டம்...
மெல்ல சன்னல் பார்க்கிறேன்
தூரமாய்..........
நனைந்து கொண்டிருக்கிறது
அடையாளம் தெரிந்ததோர்
அஃறிணை..!!


நல்ல மழை...!
சொட்டச் சொட்ட நனைகிறேன்
மழைத்துளி
உயிர்த்தளம் தொட,
ஆஹா...! சுகானுபவம்...!!
தூரமாய்............
மரங்களடியே ஒதுங்கி நிற்கிறது
அடையாளம் தெரிந்ததோர்
அஃறிணை..!!

1 comment:

J S Gnanasekar said...

இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்