புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Wednesday, August 05, 2009

எவளுக்கும் எவனுக்கும் ஒரே இரவு

இதுவரை
எது எதற்கோ
தன்னுடலில்
இருப்பதாக நினைத்த
எது எதுவோ
எல்லாம்,
வேறு
எது எதற்கோ
என்று புரியவைக்க
எவனோ வந்த பிறகு
எது எதுவும்
எது எதுவுமாகிப் போகட்டும்
என்று
எது எதுவோ
ஆகிவிடுகிறாள்
எவளும்

10 comments:

நட்புடன் ஜமால் said...

என்னென்னவோ ஆயிப்போச்சி
எவனுக்கும் தான் ...

kannan said...

something...something
its poet its something

துபாய் ராஜா said...

அருமை நண்பா.திருமணத்திற்கு பின் பெண்கள் கூச்சம் விட்டுப்போவதை அழகாக கூறியுள்ளீர்கள்.

Vilva said...

இன்னொரு "அட..!" உமது தமிழ்த்தொண்டு வாழிய..!
"எது எதுவோ" - க்கு பதிலாக "ஏதேதோ" என்றிருந்தால் எளிதாக புரிந்திருக்குமோ?

Vidhoosh said...

ஏதேதேது ஏதேதோ சொல்லிருக்கீங்க?
நல்ல கவிதை போலும்.
--வித்யா.

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு நண்பரே

J S Gnanasekar said...

அது

ச.பிரேம்குமார் said...

சேரல், மிகவும் அருமையா இருந்தது கவிதை.

Pachai said...

aapasam illatha, azhagana kavithai

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே!

-ப்ரியமுடன்
சேரல்