புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, May 05, 2009

வலி

சந்தையெங்கும்
வாசம் பரப்பி
குவிந்து கிடக்கும்
மல்லிகைப் பூக்களுக்குள்
காணாமல் போகிறது
ஒவ்வொரு பூவாகப்
பறித்துச் சேர்த்தவளின்
விரல் வலி

10 comments:

நந்தாகுமாரன் said...

ம் ... பரவாயில்லை ...

மண்குதிரை said...

சேரல், ஏதோ ஒன்று இன்னும் அந்த வலியை உணர்த்தாமல் உள்ளது.

இதைப் பாருங்கள்,

எடைபோட்டு விற்கிற
சந்தையில்
தனிப் பூவின்
அழகு செல்லுபடியாவதில்லை
-யுகபாரதி

இதை படிமாகக் கொள்ளலாம் அதே பொருளுக்கு.

முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே.

sivaprakasam srinivasan said...

வலி எங்கும் போகவில்லை
வந்த காசில் நிரவியுள்ளது.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பர்களே!

வருகைக்கும், கருத்துக்கும்

-ப்ரியமுடன்
சேரல்

thamizhparavai said...

நன்றாக இருக்கிறது

ஆ.சுதா said...

நல்லா இருக்குங்க

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி தமிழ்ப்பறவை!

உங்கள் பெயர் நன்றாக இருக்கிறது :)

@ஆ.முத்துராமலிங்கம்

நன்றி நண்பரே!

-ப்ரியமுடன்
சேரல்

பிரவின்ஸ்கா said...

நன்றாக இருக்கிறது கவிதை .

யாத்ரா said...

கவிதை நல்லா இருக்கு சேரல்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி பிரவின்ஸ்கா!

நன்றி யாத்ரா!

-ப்ரியமுடன்
சேரல்